
ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், "தமிழக சட்டமன்றத்தில் மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நீண்ட காலம் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது திருப்பி அனுப்பியிருப்பது வருத்தத்திற்குரியது. எனினும், வரும் 2026-ஆம் ஆண்டு முதல் நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளில், தமிழக சட்டமன்றத்தின் மாண்பையும், ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.