
பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய மேயர் !
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் .கோ.ராமகிருஷ்ணன் மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலை பள்ளியில் 2024-2025 ம் கல்வியாண்டில் 10 மற்றும் 11ம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த பத்தாம் வகுப்பு மாணவிகள் சந்திரமதி 493/500, கனிஇப்ராஹிமா 491/500, காளீஸ்வரி அபிராமி 491/500 சிவதர்ஷினி 490/500, ஜில்பனூர் 490/500, பதினொராம் வகுப்பில் ஜெயஸ்ரீ 582/600, செல்வபைரவி 574/600, அபர்னா 569/600 ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஷ்வரி, மாமன்ற உறுப்பினர் அனார்கலி தலைமை ஆசிரியர் கனியம்மாள, ஆசிரியர்கள் .வராஹினி ஜெபராணி மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்