தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு 100% உறுதி....உடனே வேலைக்கு திரும்புங்க.! மாநகராட்சி அறிவிப்பு

Share this Video

Chennai Corporation Sanitation workers strike : பெருநகர சென்னை மாநகராட்சியில் இராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) பணியாற்றி வரும் தூய்மை தொழிலாளர்கள். கடந்த 11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊழியர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இன்னும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்ட போது, திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளத் தேவைப்படும் கூடுதல் தூய்மைப் பணியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) கீழ், சுய உதவிக் குழுக்கள் மூலமாக தற்காலிக அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video