கோவையில் கன மழை

Share this Video

கோவையில் பெய்த அதிக கன மழை : மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து வீடுகள் மூழ்கின.அடிப்படை வசதிகள் இல்லாத முகாமில் தஞ்சம் அடைந்து, அவதிப்பட்டு வரும் மக்கள் . தற்போது சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளோம். தொடர்ந்து மழை பெய்யும் காலம் என்பதால் வேலைகளுக்கு செல்ல முடியாது. நாங்கள் தினக் கூலி செய்து பிழைப்பவர்கள். மழையினால் வீடுகளில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டன. எங்களுக்கு உணவு, தங்கும் இடம் ஆகியவற்றை அரசாங்கம் ஏற்பாடு செய்து தர வேண்டும். வயதான முதியவர்களுக்கு இயற்கை உபாதைகளுக்கு கூட வழியில்லாத நிலை உள்ளது. மழை நிவாரண நிதி ஏதாவது கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்கம் சலுகை கொடுப்பதாக செய்திகளிலும், நாளிதழ்களிலும் கூறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை. ரேஷன் பொருட்களுக்கு கூட நாங்கள் வேலையை விட்டு, விட்டு ஒரு நாள் ரேகை வைக்க செல்ல வேண்டிய நிலை உள்ளது. நிறைய திட்டங்கள் புதிதாக வருவதாக கூறுகிறார்கள், ஆனால் எங்களுக்கான திட்டங்கள் எதுவும் எங்களை வந்து சேருவதில்லை என வேதனை தெரிவித்தனர்

Related Video