நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி

Share this Video

கேள்வி: விஜய் தொடர்ச்சியாக, அதிமுகவை விமர்ச்சித்து வருகிறார், அதை எப்படி எடுத்துக்கொள்வது..? இபிஎஸ் : அவர் வெளியே வந்து பொதுவெளியில் பார்த்தால் தான் தெரியும். அவர் பொதுவெளிக்கே வரவில்லை. ஒரு சம்பவம் நடந்த பின், 72 நாட்களாக அவர் வெளியே வரவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எந்தக் கட்சி எந்தெந்தக் கட்சியோடு கூட்டணியில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை. எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்குகிறது என்று தெரியவில்லை. இவரை வைத்து என்ன செய்வது..? நாட்டில் நடக்கிற நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை. ஒரு தடவையாவது பத்திரிகையாளர்களை சந்திக்கச் சொல்லுங்கள். செய்தியாளர்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னால் தான், நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர் புரிந்து கொள்ளட்டும்.என கடுமையாக தாக்கி பேசினார் எடப்பாடி பழனிசாமி .

Related Video