நிறைவு பெற்ற கடலூர் புத்தகக் கண்காட்சி!கடைசி நாளில் அதிக அளவிலான வாசகர்கள் வருகை!
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்தற்காக கடலூர் மாவட்டநிர்வாகம் சார்பாக கடந்த பத்து நாட்களாக நடந்த புத்தகத் திருவிழா நேற்று நிறைவடைந்தது. கடைசி நாளில் அதிக அளவிலான வாசகர்கள் வருகை தந்தனர் .2.5 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் கலந்து கொண்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.