Ooty Rain : தொடர் மழையால் உதகை படகு இல்லத்தில் படகுசவாரி ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் குளிருடன் சாரல் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் உள்ளூர் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Share this Video

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் குளிருடன் சாரல் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் உள்ளூர் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மிதி படகுகள், துடுப்பு படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேற்கூரையுடன் கூடிய மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டது. படகு சவாரி செய்ய ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video