Parandur Airport : பரந்தூரில் அமையும் 2வது விமானநிலையம்!

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

Share this Video

சென்னை மீனம்பாக்கத்தில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2-வது விமான நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கபட்டு வருகின்றன. இந்நிலையில்,
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பரந்தூரில் 4,791 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கும் என்றும், மக்களுக்கும், சுற்றுவட்டார நிலம் மற்றும் நிலத்தடி நீராதாரங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் கையகப்படுத்தப்படும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

பரந்தூர், சென்னையின் மையப்பகுதியான எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 68.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. புதிய விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக 2 மணிநேரம் 20 நிமிடங்களில் செல்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video