Asianet News TamilAsianet News Tamil

கொடுத்த பணத்தை கேட்டதால்.. மேட்டரையே மாத்திய லேடி..! ஐயோ.. அம்மான்னு கதறும் நபர்..! வீடியோ

நாகர்கோயில்  மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் இதனை காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்துவதாக கூறியுள்ளனர் ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கே. மணிகண்டன் என்பர் வசித்து வருகிறார் இவர் 8 மாதங்களுக்கு முன்பு தனது குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார். அப்போது நாகர்கோயில் மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள சாலோம் டிராவல்ஸில் வெளிநாடு செல்ல பணம் கட்டியுள்ளார்.

நீண்ட நாட்களாகியும் வெளிநாடு செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மணிகண்டன் பணத்தை திருப்பி கேட்டு உள்ளார் அப்போது சாலோம் டிராவல்ஸ் பெண் ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று புகார் கொடுப்பேன் என மிரட்டி உள்ளார். தற்ப்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை குறித்து மணிகண்டன் கூறுகையில் நாகர்கோயில்  மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் இதனை காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்துவதாக கூறியுள்ளனர் ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மணிகண்டன் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

Video Top Stories