
சீமானுக்கு போலீசார் விதித்த 10 நிபந்தனைகள்.! மீறினால் கைது செய்யப்படலாம் ... தேதி குறித்த காவல்துறை!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் அளித்திருந்தனர். அதன் படி இன்று வளசரவாக்கம் போலீஸ் முன்பு ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து நாளை காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பு போலீசார் சம்மனை ஒட்டிள்ளனர்.