Asianet News TamilAsianet News Tamil

நகராட்சி துவக்கப்பள்ளியில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சி துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்படும் உணவை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட துரைசாமி சாலை பகுதியில் உள்ள வி எஸ் வி நகராட்சி துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை தயார் செய்யப்பட்டிருந்த உணவை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு, உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தயார் நிலையில் உள்ள உணவுகளை 15 பள்ளிகளில் பயிலும் 667 மாணவ, மாணவிகளுக்கு இந்த உணவுகளை அனுப்புவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர்.

Video Top Stories