வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Share this Video

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில நாட்களாக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான். இதனிடையே குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் அங்குள்ள ஒரு கறிக்கடையில் கறியை வெட்ட சொன்னபோது அகிம்சைவாதியான என்னை இம்சைவாதியா ஆக்குறீங்களேப்பா என கலகலப்பாக பேசி கறிகளை இரண்டு துண்டுகளாக வெட்டி சிக்கனை காட்டி ஏக் மால் தோ துக்கடா என நகைச்சுவையாக பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video