Asianet News TamilAsianet News Tamil

Watch : பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்! 108 ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த நர்ஸ்! தாயும் சேயும் நலம்!

அம்மூர் அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது45) கூலி தொழிலாளியான இவரது மனைவி இளவரசி (வயது 35) நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு காலை பிரசவ வலி ஏற்பட்டது. பிறகு கணவர் மோகன் மற்றும் அவரது உறவினர்கள் அம்மூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு இளவரசியை ஏற்றி சென்று கொண்டிருந்த போது, ஆற்காடு தனியார் கல்லூரி அருகே இளவரசிக்கு வலி அதிகரித்தது. இதனால், ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உயவியாளர் மாலதி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது இளவரசிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் உரிய சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்‌. ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
 

Video Top Stories