Asianet News TamilAsianet News Tamil

Watch : ரத்தனகிரி பாலமுருகன் கோவில் 56ம் ஆண்டு விழா! பல்லாயிரம் பேருக்கு அன்னதானம்!

ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலில் 56-ஆம் ஆண்டு மெய்ஞானம் பெற்ற திருநாளையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் கூடிய மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
 

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலில் 1968-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று கோவிலின் 56-ம் ஆண்டு அடி வைத்ததை தொடர்ந்து மெய்ஞானம் பெற்ற தினமாக கருவறையில் இருக்கும் பாலமுருகன் சாமிக்கு அர்ச்சகர்கள் பூ மாலைகளை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீபாரதனை காட்டப்பட்டது

கோவில் திருவிழாயையொட்டி வருகை தந்திருந்த, பாலமுருகனடிமை அடிகளார் சுவாமிகள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பின்னர் கோவில் வளாகத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான கூடத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் கூடிய மாபெரும் அன்னதான விருந்து பரிமாறப்பட்டது.
 

Video Top Stories