Asianet News TamilAsianet News Tamil

Watch : திருச்செந்தூர் கடலில் பக்தர் தவறவிட்ட 5 பவுன் நகை! மீட்டுகொடுத்த சிப்பி தொழிலாளிகள்!

திருச்செந்தூர் கடலில் பக்தர் ஒருவர் தவறவிட்ட 5 பவுன் நகையை, சிப்பி எடுக்கும் தொழிலாளர்கள் மீட்டு கொடுத்தனர்.
 

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்கு வருவோர் கடலில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, பக்தர் ஒருவரின் 5 சவரன் தங்கக் காப்பு கடலில் நீராடுகையில் திடீரென மாயமானது.

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கார்த்திக். கடந்த 1 ஆம் தேதியன்று தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர் அனைவரும் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தபோது, கார்த்திக் மகன் ஸ்ரீராம் கையில் அணிந்திருந்த 5 சவரன் தங்கக்காப்பு திடீரென கடலில் தவறி விழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த கோவில் கடல் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் தேடியும் தங்கக்காப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கடலில் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மணி பிரசாந்த் மற்றும் கடல் பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் மாலையில் 5 பவுன் தங்க காப்பினை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் கார்த்திக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று காலையில் திருச்செந்தூர் வந்த கார்த்திக்கிடம் சிப்பி அரிக்கும் தொழிலாளர் மணி பிரசாந்த் தங்க காப்பினை ஒப்படைத்தனர்.

Video Top Stories