Asianet News TamilAsianet News Tamil

Watch : திருப்பூர் அருகே தீ பற்றி எரிந்த காலி கேஸ் டேங்கர் லாரி! பெரும் விபத்து தவிர்ப்பு!

திருப்பூர் அருகே காலி கேஸ் டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஸ்ட வசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீவிபத்தால் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.
 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கேஸ் சேமிப்பு கிடங்கில் கேஸ் இறக்கிவிட்டு சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. ஈரோடு பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையில் லாரிகள் நிறுத்தியபோது டிரைவர் இருக்கையின் இடது புறம் தீ பிடித்திருப்பதை கண்ட டிரைவர் ரவி தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்ட போது, தீ மளமளவென பரவியது. இதையடுத்து டிரைவர் எட்டிக் குதித்து தப்பியோடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி மற்று திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையின் இரண்டு வாகனங்களில் வந்து 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Video Top Stories