குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Video

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அருவிகளின் நகரம் என போற்றப்படும் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவியை நோக்கி வாகனங்களில் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் 24 மணி நேரமும் களைகட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் கடை அமைத்துள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Video