
கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்
மழை, வெள்ளம் குறித்து ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து பெருவாரியான குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனிடையே வெள்ளம் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சென்றிருந்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

அப்போது அவரை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் தூர்வாரும் பணிகள் மிகவும் மந்த நிலையல் மேற்கொள்ளப்பட்டதாகவும், குளங்களின் கரைகளில் உள்ள மணலை அதிகாரிகள் அள்ளிச்சென்றதால் கரை பலவீனமடைந்து உடைப்பு ஏற்பட்டதாகவும் கூறி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.