Viral video : மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க நூதன முறை! - பலே ஐடியா!

நெல்லை மாவட்டம் சிவந்திபுரத்தில் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க நூதன முறையை கையாண்ட மின்சார ஊழியர்கள்.
 

Share this Video

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரம் கிராமத்தில் சுமார் 1,500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினரின் தேவைக்காக இந்த மின் கம்பங்கள் மூலமாக சில பகுதிகளுக்கு உயர் அழுத்த மின்சாரமும் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்பகுதியின் நடுவே மின் வயர் மின் கம்பத்தில் உரசாமல் இருக்க செருப்பு வைத்து கட்டப்பட்டுள்ளது. அதாவது மின்சார வயர் மின் கம்பத்தில் படுவதால் மின்சாரம் பாயும் அபாயம் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, மின் கம்பத்திற்கும், மின் வயருக்கும் இடையே செருப்பை வைத்து மின்சாரம் பாயுவதை தடுக்கும் விதமாக மின்சார துறையினர் ஈடுபட்டு இருக்கும் இந்த செயலை இப்பகுதியினரை ஆச்சரியமான பார்த்து செல்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video