
முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி; இபிஎஸ்க்கு எதிரான கோசத்தால் பரபரப்பு
பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆங்காங்கே கோசம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.