Asianet News TamilAsianet News Tamil

Watch : புதுக்கோட்டை நெருஞ்சிப்பட்டி கோவில் திருவிழா! ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் நெருஞ்சிப்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி கோலகலமாக நடைபெற்றது.
 

புதுக்கோட்டை மாவட்டம் நெருஞ்சிப்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்தாண்டின் கடைசி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700 காளைகள் பங்கேற்றுள்ளன 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வெற்றி வாகை சூடினர். பல காளைகள் காளையர்களின் பிடியில் சிக்காமல் வீரர்களை திணறடித்து தப்பித்துச் சென்றது சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது

வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Video Top Stories