Asianet News TamilAsianet News Tamil

கடன் தொல்லையால் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி.. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பரபரப்பு வீடியோ காட்சி..!

கடன் தொல்லையால் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி.. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பரபரப்பு வீடியோ காட்சி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சந்திர கிராமம் நகர் சேர்ந்தவர் பச்சையம்மாள் இவரது கணவர் மாதேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து 7 மாத காலங்கள் ஆகிறது

இவர் கடன் பிரச்சினையால் பிரிந்து உள்ளதாக கூறப்படுகிறது கடன் கொடுத்தவர்கள் தனது மனைவி மகன்களிடம் கடன் திருப்பி கொடுக்கும் படி தகாத வார்த்தைகளால் பேசியதால் பச்சையம்மாள் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆகையால் கடன் கொடுத்தவர்களுக்கு கேட்கும்போது திருப்பி தர முடியாததால் தனது இரு பிள்ளைகளை அழைத்து சென்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள  முயற்சித்தபோது போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Video Top Stories