Asianet News TamilAsianet News Tamil

கரூரில் ஐடி ரெய்டின் போது வீட்டின் சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் அதிகாரிகள் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், ஒரு வீட்டில் அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

கரூர் மாவட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக பாலவிநாயகா புளுமெட்டல் உரிமையாளர் தங்கராசு வீட்டிற்கும் அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டின் கதவை திறக்க முடியாது என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் வேறு வழியின்றி வீட்டின் சுவற்றில் ஏறிக்குதித்து உள்ளே சென்ற காணொலி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Video Top Stories