Asianet News TamilAsianet News Tamil

மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

அலங்கரிக்கப்பட்ட  டிராக்டர்களில் உழவு கருவிகளுடன் நடைபெறும் உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்து டிராக்டர் ஓட்டி சென்றார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

தருமபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சியகம், கொங்கு இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கும் பெருவிழா இன்று  நடைபெற்றது. விழாவில் அ.தி.மு.க. பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட  டிராக்டர்களில் உழவு கருவிகளுடன் நடைபெறும் உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்து டிக்டரை ஓட்டி சென்றார். தொடர்ந்து கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயத்தை திறந்து வைத்தார்.

Video Top Stories