சென்னையில் மாடு முட்டியதில் சாலையில் நடந்து சென்ற முதியவர் படுகாயம்

சென்னை பார்த்தசாரதி கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டியதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share this Video

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே சில பசு மாடுகள் நின்று கொண்டிருந்தன. அதில் திடீரென ஆக்ரோஷமான மாடு ஒன்று முதியவரை பலமாக மோதி தூக்கி வீசியது.

இதில் அந்த முதியவர் படுகாயமடைந்து கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், முதியவரை மாடு முட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் இதே போன்று சென்னையில் தெருவில் திரிந்துகொண்டிருந்த மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்ததைத் தொடர்ந்து தெருக்களில் உலாவும் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அதன் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Video