Asianet News TamilAsianet News Tamil

நீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு உணவு வழங்கிய அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை தேங்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை படகு மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரிமணியன் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார்.

Video Top Stories