
Chennai Rain: சென்னையின் பல பகுதிகளில் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதால் பரபரப்பு
சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்துவாங்கும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தப்பட்ட கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பு.
மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாநகரின் பல சாலைகள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் கார்களை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த நிலையில் கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source
