Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து விபத்து

சென்னை அடையாறு பகுதியில் மேம்பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது.

சென்னை அடையாறு பகுதியில் வழக்கம்போல் இன்றும் வாகனங்கள் சென்றுகொண்டு பரபரப்பாக இயங்கி வந்தது. இந்நிலையில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கார் உடனடியாக பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்ட நிலையில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் தீ பிடித்து சேதமடைந்தன.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video Top Stories