Asianet News TamilAsianet News Tamil

அரியலூர் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்; பக்தர்கள் பரவசம்

அரியலூரில் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு ரூ.2.10 லட்சத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அரியலூர் நகரில் உள்ள மேல தெருவில் அமைந்துள்ளது பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய நாயகி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்துச் சென்றனர்.

Video Top Stories