
கோவையில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் ஆனந்த குளியலிட்ட கோவில் யானை
கோவை பேரூர் பட்டீசுவரர் கோவிலில் தமிழக அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள குளியல் தொட்டியில் கோவில் யானை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது.
கோவை பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலில் தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலை சார்பில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் சாய்வுதள வசதியுடன் குளியல் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இதனைத் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திறந்து வைத்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

இதனைத் தொடர்ந்து கோவில் யானை கல்யாணி அந்த குளியல் தொட்டியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது.