
சரணம் ஐயப்பா கோஷம் முழங்க பரவசத்துடன் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்
கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் மாலை அணிந்து கொண்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி கார்த்திகை முதல் நாளான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐயப்ப பக்தர்கள் காலை முதலே மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.
Add Asianetnews Tamil as a Preferred Source
