
கையில் துப்பாக்கி, சாக்கடையில் வாக்குப் பெட்டி; மேற்குவங்கத்தில் பயங்கரம்!!
மேற்குவங்கத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் நிலையில் இளைஞர்கள் துப்பாக்கியுடன் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சி வைரலாகி வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாங்ரா என்ற இடத்தில் கையில் துப்பாக்கியுடன் சண்டையிட்டுக் கொள்ளும் நபர்கள். மேலும் அந்தப் பகுதியில் வாக்குப் பெட்டிகளை சாக்கடை கால்வாய்களில் பெண்கள் வீசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக இந்த மாநிலத்தில் நடந்த வன்முறையில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Asianetnews Tamil as a Preferred Source
