Asianet News TamilAsianet News Tamil

பகைவர்கள் பலத்தோடு வருகிறார் - திருச்சி சிவா எச்சரிக்கை

பகைவர்கள் பதுங்கியிருந்து பலத்தோடு வருகிறார்கள். அனைவரும் களத்தில் தயாராக இருக்க வேண்டிய காலக்கட்டம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.
 

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் கருஞ்சட்டை பதிப்பகம் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பகைவர்கள் பலத்தோடு வருகிறார்கள் ்பதுங்கி இருந்து வருகிறார்கள். நேரடியாகவும் வருகிறார்கள். பார்த்துக் கொள்வோம் ன்று படுத்துக் கொண்டு தூங்குவதற்கு மாறாக களத்தில் அனைவரும் தயாராக இருக்க வேண்டிய காலக்கட்டம். 

இந்த இனத்தை, மொழியை, மண்ணை, மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நம் அத்தனை பேரிடமும் உள்ளது என்று பேசினார்.

 

Video Top Stories