வல்லபாய் படேல் பிறந்த தினம்: மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி!

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 

Share this Video

இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டித, குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் தலைவிதியை வடிவமைத்த அசாதாரண அர்ப்பணிப்பை நாம் நினைவு கூருகிறோம். தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது. அவருடைய சேவைக்கு என்றென்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

Related Video