
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
பெங்களூருவில் இரண்டு குழந்தைகளுக்கு எச்எம்பிவி தொற்று உறுதியான நிலையில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் மனித மெட்டாப்நிமோனியா வைரஸ் அதாவது HMPV வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 5 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source
