
கேரளாவில் கொளுந்துவிட்டு எரிந்தபடி நீண்ட தூரம் பயணித்த கார்; கீழே குதித்து தப்பிய ஓட்டுநர்
ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்த நிலையில், ஓட்டுநர் தப்பி ஓட்டம், கார் தீ எரிந்த வாறு நீண்ட தூரம் சென்றதால் பரபரப்பு.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகர பகுதியான அம்பலமூக்கு பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை சுதாகரித்து கொண்ட ஓட்டுநர் காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிய நிலையில் கார் நீண்ட தூரம் சாலையில் சென்று மற்றொரு வாகனத்தில் மோதி நின்றது. இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ யை அணைத்தனர், ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
Add Asianetnews Tamil as a Preferred Source
