
ஓட்டுநரின் சாதுர்யத்தால் நுலிழையில் உயிர் தப்பிய பெண்; இணையத்தில் வைரலாகும் வீடியோ
மங்களூருவில் பெண் ஒருவர் கவனக்குறைவாக சாலையை கடக்க முயற்சிக்கும் நிலையில், அப்போது வேகமாக வந்த பேருந்து ஓட்டுநரின் சாதுர்யத்தால் அப்பெண் நுலிழையில் உயிர் தப்பும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பெண் ஒருவர் சாலையை கடக்க முயற்சிக்கிறார். கவனக்குறைவாக சாலையை முறையாக கவனிக்காமல் கடக்க முயன்ற நிலையில் அதே நேரத்தில் அதிவேகமாக பேருந்து ஒன்று வருகிறது. அந்த பேருந்து ஓட்டுநர் சாலையை கடக்கும் பெண்ணை பார்த்ததும் சாதுர்யமாக பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்தி பெண்ணின் மீது மோதாமல் தடுத்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source
