Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் உருவான விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்

கொச்சினில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் பிரதமர் மோடியால் இன்று நாட்டுக்கு அர்பணிப்பு!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இன்று கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுவரை 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், அதிநவீன தானியங்கி அமசங்களைக் கொண்ட இந்தக் கப்பலை துவக்கி வைத்தார். இத்துடன், காலணி ஆதிக்கத்தின்போது, இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட்டு இருந்த கொடியை ஒழித்து, புதிய வடிவத்தில் புதிய கொடியை அறிமுகம் செய்கிறார். விக்ராந்த் என்றால் வெற்றி மற்றும் வீரம். 2005 ஆம் ஆண்டு, இந்தக் கப்பலை கட்டுவதற்காக ஸ்டீல் கட் செய்யப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. 

Video Top Stories