
PM Modi : பிரதமர் மோடியை வரவேற்று, கைக்குழந்தையுடன் சாலையில் நின்றிருந்த குடும்பம்!
கர்நாடக தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி பெங்களூருவில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடக தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருக்கின்றனர். பெங்களூருவில் பிரதமர் மோடி 26 மணி நேர ரோட் ஷோ பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளார்.
சாலை நெடுங்கிலும் மக்கள் பிரதமர் மோடியை வரவேற்று வருகின்றனர். ஒரு குடும்பத்தினர் கைக்குழந்தையுடன், அனுமன் முகமூடி அணிந்து மோடி கோஷம் எழுப்பினர்.
Add Asianetnews Tamil as a Preferred Source
