Asianet News TamilAsianet News Tamil

பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற அதே இடத்தில் கூட்டிச்சென்று வெறித்தனமாக சுட்ட போலீஸ்.. காவலரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள்..!வீடியோ

எரித்துக் கொன்ற அதே இடத்தில் கூட்டிச்சென்று வெறித்தனமாக சுட்ட போலீஸ்.. !

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் , பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சேர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர்.விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்திற்கு இன்று அதிகாலை குற்றவாளிகளை அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர். அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதால் 4 பேரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர்.

 

Video Top Stories