ரவுடியை கோட்டைவிட்ட இன்ஸ்பெக்டர்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த டிஐஜி..! வீடியோ

கொலை வழக்கில் ரவுடி மீது நடவடிக்கை எடுக்காததால் டிஐஜி பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Share this Video

கரூர் மாவட்டம் முதலை பட்டியைச் சேர்ந்த வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த ஜெயகாந்தன் தலைமையிலான ரவுடிகள் வெட்டிக் கொலை செய்தனர்.

இந்தக் கொலை சம்பவத்திற்கு காரணம் அதே பகுதியில் உள்ள குளம் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியதே என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் குளித்தலை போலீஸார் இந்த வழக்கு விசாரணையில் அலட்சியமாக இருந்ததால் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை டிஐஜி பாலகிருஷ்ணன் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Video