யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் "சைத்ரா" 24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம்! ட்ரைலர் இதோ...

நடிகை யாஷிகா ஆனந்த், நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் உருவாகியுள்ள ஹாரர் படமான 'சைத்ரா' ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேப்பை பெற்றுள்ளது.
 

Share this Video

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் " சைத்ரா " 

இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார். 

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி M. ஜெனித்குமார் இயக்கியுள்ளார் . இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். 24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Video