
திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார் இதனை எடுத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது..திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் போது சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. திருச்செந்தூர் முருகன் நல்ல பெரிய வாய்ப்புகளை கொடுத்துள்ளார். நன்றி சொல்ல கோவிலுக்கு வந்துள்ளேன். பேட்டியின் போது அருகில் இருந்த ஒரு மூதாட்டியை அழைத்து கந்த சஷ்டி திருவிழாவிற்கு மௌன விரதம் இருந்து வருகிறார் என தெரிவித்தார். இதனையடுத்து அந்த மூத்தாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். கையில் இருந்த பிரசாதத்தை அந்த மூதாட்டிக்கு கொடுத்தார். மூக்குத்தி அம்மன் இரண்டாவது பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார். நயன்தாரா நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இருந்தாலும் படத்தை தொடங்கும் போது தெரிவித்தார்கள் அந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.