Asianet News TamilAsianet News Tamil

மகனை வைத்து ஜெயம் ரவி போட்ட பிளான்? ஆர்த்தியுடன் மோத தயாரான ஜெயம் ரவி!

ஜெயம் ரவியின் மகன்கள் தற்போது, ஆர்த்தியிடம் உள்ள நிலையில் அவர்களை மீட்டே தீர வேண்டும் என முழு முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
 

First Published Sep 23, 2024, 4:27 PM IST | Last Updated Sep 23, 2024, 4:27 PM IST

பல வருடமாக சண்டை... சச்சரவோடு வாழும் கணவன் மனைவி கூட பிரிந்து செல்வதை பற்றி ஜோசிக்காத நிலையில், கடந்த வருடம் வரை ஒற்றுமையாக இருந்த ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே கடந்த 6 மாதத்தில் ஏற்பட்ட பிரச்சனை விவாகரத்து வரை வந்துள்ளது. ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் பிள்ளைகளுக்காகவாது சேர்ந்து வாழ வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம் மட்டும் அல்ல, ஆர்த்தி - ரவியின் பெற்றோர் விருப்பமும் இது தான்.

இவர்கள் பிரச்னையை சரி செய்ய, இரு வீட்டு பெரியோர்களும் கலந்து பேசி... அறிவுரை வழங்கிய பின்னரும், ஆர்த்தி - ரவி பிடிவாதமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்த்தி தரப்பில் ஜெயம் ரவி மீது தான் முழுக்க முழுக்க தவறு என்று கூறி, பாடகியின் காதல் வலையில் ஜெயம் ரவி இருப்பதாக ஆர்த்தி கூறி உள்ளார். ஆனால் ஜெயம் ரவி ஆர்த்தி மீது உள்ள குற்றம் என்ன என்பதை தெரியப்படுத்த வில்லை என்றாலும், குடும்ப நலன் கருதி இந்த முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ஜெயம் ரவி - ஆர்த்தியின் பிள்ளைகள் இருவரும் ஆர்த்தியுடன் உள்ள நிலையில்... தன்னுடைய பிள்ளைகளை ஆர்த்தியிடம் இருந்து ஜெயம் ரவி மீட்க போராடி வருவதாக கூறப்படுகிறது. இது பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
 

Video Top Stories