
மருத்துவமனையில் போராட்டத்தில் குதித்த நடிகர் கஞ்சா கருப்பு
நடிகர் கஞ்சா கருப்பு சென்னையில் உள்ள போரூர் அரசு மருத்துவமனையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். அங்கு சிகிச்சைக்கு வந்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, மருத்துவர்கள் இல்லாததால் மக்களோடு காத்திருந்தார். வெகு நேரம் ஆகியும் மருத்துவர்கள் வராததால் அங்கு இருந்த பொதுமக்களோடு சேர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த செவிலியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source
