அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்

நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நபர் அவர் எதை செய்தாலும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படி தான் அரசியலிலும், எனக்கு அரசியல் அறிவும் கிடையாது, ஆசையும் கிடையாது என நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.

Share this Video

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த லட்சுமிபுரத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழா யூத் அண்ட் இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி, பிரபல நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான குக் வித் கோமாளி பாலா ஆகியோர் பங்கேற்று பேசினர். பாலாவுடன் பள்ளி சிறுவர், சிறுமியர் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலா, தான் தொடர்ந்து மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆம்புலன்ஸ்கள் வாங்கி தந்துள்ளேன். இதுவரை 5 ஆம்புலன்ஸ்கள் வாங்கிய நிலையில் மீதமுள்ள ஐந்தையும் விரைவில் வாங்கி தருவேன். நடிகர் விஜய் அரசியல் ஆரம்பித்தது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜய் எதை செய்தாலும் யோசித்து தான் செய்வார். 

தனக்கு அரசியல் ஆசை எதுவும் கிடையாது, என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்கு நிறைய செலவு செய்கின்றனர், அதை என்னிடம் கொடுத்தால் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கி தர முடியும் என்று தெரிவித்தார்.

Related Video