
கோவை தொடர் குண்டு வெடிப்பை மையமாக கொண்டு எடுத்த படம் இது ! புதுமுக நடிகர் ஆதவ ஐஸ்வரா பேச்சு !
தயாரிப்பாளர் ஆதவ ஐஸ்வரா தயாரிப்பில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள பாய்(BHAI) திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்திற்குள் காணொளி வாகனம் மூலம் திரையிடப்பட்டது. இதனை அங்கிருந்த மக்கள் பார்த்து படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஆதர ஐஸ்வராவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இது குறித்து பேட்டி அளித்த ஆதவ ஐஸ்வரா 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படத்தை வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இது உண்மை சம்பவம் அல்ல ஆனால் குண்டு வெடிப்பு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும் கூறினார். இந்த திரைப்படம் தீவிரவாதத்திற்கு எதிரான படம் என்று கூறிய அவர் தீவிரவாதத்தால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் மதத்தை வைத்தும் கடவுளை வைத்தும் எவ்வாறு அரசியல் செய்யப்படுகிறது என்பது பற்றிய படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.