அந்த நிகழ்ச்சியால் வந்த வினை! விஜய் டிவி தொகுப்பாளர் மகாபா மீது வழக்கு பதிவு!

விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா மீது... நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Video

சிவகார்த்திகேயனுக்கு அடுத்த படியாக, விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் மாகாபா ஆனந்த். விஜய் டிவி நிகழ்ச்சிகளை தவிர, தமிழகத்தில் பிற பகுதிகளுக்கு சென்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, மற்றும் வெளிநாடுகளுக்கும் விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில், திருச்சியில் ஒரு நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியதாக கூறப்படுகிறது. ரோட்டில் பிரமாண்ட செட் போட்டு நடத்த பட்ட இந்த நிகழ்ச்சி, உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக கூறி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மீது புகார் அழிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Video