
விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள எஸ்.எஸ்.கோட்டை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வாகனத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் மறித்து அதிரடி சோதனை நடத்தினர். காரைக்குடி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அவரது காரை நிறுத்திய அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிகளின்படி சோதனையிட்டனர். சுமார் பத்து நிமிடங்கள் நீடித்த இந்த ஆய்வின்போது, விஜய் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். காரில் சந்தேகத்திற்கிடமான பொருட்களோ அல்லது ஆவணங்களோ ஏதும் இல்லாததால், அதிகாரிகள் அவரைச் செல்ல அனுமதித்தனர். இந்தத் திடீர் சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், தகவலறிந்த ரசிகர்கள் அங்கு திரண்டதால் போக்குவரத்து நெரிசலும் உண்டானது.