
பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதை போல் தமிழகத்தில் ஊடுருவ முடியாது..
ஒரு தீங்கு வரும்பொழுது அதனைத் தடுக்கின்ற மற்றும் எதிர்க்கின்ற வலிமை திமுகவுக்கு தான் இருக்கிறது. மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து, சுடுவதைப் போன்ற நிகழ்ச்சி பாஜக மேடைகளில் நடைபெறுகிறது. மேலும் கோட்சே வாழ்க என்றும் கோஷம் போடுகின்றனர். இதைவிட ஜனநாயகத்திற்கு பெரிய ஆபத்து இருக்கப் போவதில்லை. இந்த ஆபத்தை டுப்பதில் திராவிட இயக்கம் தனித்து நின்கின்றது. பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதைப் போன்று தமிழ்நாட்டில் ஊடுருவ முடியாது. அதனை தடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.